கடல் என்பது மிகப்பெரும் சிறை Leave a Comment / By Rajesh Vairapandian / April 18, 2023 கடல் என்பது மிகப்பெரும் சிறை மீன்கள் பாடுவதை கேட்டிருக்கிறாயாஅவை தனித்தனியாகவும்மொத்தமாகவும் சேர்ந்து பாடுவதைநான் கேட்டிருக்கிறேன்அந்தப் பாடல்கள் அனைத்திலும்வானமும் மின்னும் நட்சத்திரங்களும்மங்கிய நிலவும் தவறாமல் இடம்பெற்றிருக்கும்ரகசியத்தை உனக்குச் சொல்லவா?ஏன் எந்தவொரு பாடலிலும் கடலும் அலையும் ஆமைகளும்நண்டுகளும் இல்லை என்பதறிவாயா?பன்னெடுங்காலமாய் மீன்களின் விறைத்தபார்வையின் காரணம் யோசித்திருக்கிறாயா?இல்லை.மீன்கள் பாடுவதையே நான் கேட்டிராதபோதுஅந்தப் பாடல்களின் அர்த்தம்எனக்கெப்படித் தெரியும்?நீயே அதன் காரணத்தையும் சொல்லிவிடு.சரிஒரே வரியில் சொல்கிறேன் கேள்.கடல் என்பது மிகப்பெரும் சிறை. மேலும் சில கவிதைகள் No posts found!